Friday, May 27, 2011

ஜிரா பிறந்தநாள்! சுந்தராம்பாள் வேல் வேல்!

இன்று, இனியது கேட்கின் தலைமகனுக்கு இனிய பிறந்தநாள்!

எனக்கும் இன்று பிறந்தநாள் தான்! = மீண்டும் முருகனருள்/கண்ணன் பாட்டில் எழுதவொரு இனிய பிறந்தநாள்!
இரண்டுக்கும் ஒன்றாய்........முருகா என்று வாழ்த்துவோமா? :)

இவனுக்கு மூன்று முகம் :)
இவன் தலைவனுக்கு ஆறு முகம்! :)


நம்ம ஜிரா என்னும் கோ.இராகவனுக்கு
இன்று,
(May-27-2011)
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க, மக்கா! :)




ஒரு ஊர்ல...ஒரு நாள்....சில்க் ஸ்மிதா + முருகன் + ஜிரா - மூவரும் சந்தித்த பதிவு இங்கே! :) Happy Birthday Ragava :)


கே.பி. சுந்தராம்பாள் - என்னை மிகவும் பாதித்து விட்ட ஒரு பெயர்!
காதல் மனம் என்றால் என்ன?
Kodumudi Balambal Sundarambal! அவருடைய "அக வாழ்வை" ஒட்டி, முன்பு இட்ட பதிவு இங்கே!

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
பின்னம் அவனுடைய ஆரூர் கேட்டாள்
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்!
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!

KBS அம்மாவின் முருகக் குரலில், பிறந்த நாள் பஞ்சாமிர்தம் சாப்பிடுவோமா? இதோ பாடுறாங்க பாருங்க! = ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்!

பழனி மலை மீதிலே
குழந்தை வடிவாகவே
படைவீடு கொண்ட முருகா

பால் பழம் தேனோடு,
பஞ்சாமிர்தம் தந்து,
பக்தரைக் காக்கும் முருகா!

ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்! - சக்தி
வடிவுண்டு, மயிலுண்டு, கொடியுண்டு! வேல் வேல்!
ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்!

(பழனி மலைத் தங்க ரதக் காட்சிகள்...)

வடம் இட்ட பசும் தங்கத் தேரு
எங்கும் ஒளி சிந்த இழுக்கின்ற, கரம் பல நூறு
இடைத் தொட்ட கைக்கொண்ட பிள்ளை - எங்கள்
இயல் இசை நாடகத் தமிழுக்கு எல்லை!

வேல் வேல்!
சக்தி வேல் வேல்!
வெற்றி வேல் வேல்!
ஞான வேல் வேல்!
*********************************

என் கண்ணாளா முருகா....
கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது?
குழந்தையின் வடிவிலே யார் வந்தது?
நீறிட்ட நெற்றியுடன் யார் வந்தது?
நெஞ்சம் துடிக்குதே யார் வந்தது?
யார் வந்தது? யார் வந்தது?......

படம்: துணைவன்
குரல்: கே.பி.சுந்தராம்பாள்
வரி: அ. மருதகாசி ?
இசை: கே.வி.மகாதேவன்

Wednesday, May 04, 2011

கிருத்திகைப் பதிவு


இன்று கிருத்திகை. முருகனை நினைக்க நல்லது நடக்கும் நாள்.நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னுடைய பதிவு முருகன் அருளில் அவன் அருளால். முருகனை குழந்தையாக பாவித்து  திரு. நீலகண்டசிவன் அவர்களெழுதிய பாடல். திருமதிகள் ரஞ்சனி- காயத்ரி அவர்கள் மிகவும் அருமையாகப் பாடியுள்ளனர். கேட்டுப் பாருங்கள்.கிருத்திகை பதிவைத் தொடர முருகன் அருளை வேண்டி இந்தப் பதிவை அளிக்கிறேன்.
ராகம்: ரீதிகௌள

பல்லவி

ஓராறு முகனே
அன்னைஉமையாள் திரு மகனே...ஓராறு

அனுபல்லவி

ஈராறுகரனே எனக்கும் உன்கருனை
பராய் என் கண்ணே என் பாலசுப்ரமண்யா....ஓராறு

சரணம்

ஓங்கார பொருளே அருள்மறை ஓளிபடவரும் முதலே
நீங்காது எனதுள்ளெ மேவி அருளும்
திரு நீலகண்டம் அருமை பாலகனே பரனே....ஓராறு


அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP