Thursday, April 28, 2011

தணிகை மலைப் படிகள் எல்லாம் திருப்புகழ் பாடும்


தணிகை மலைப் படிகள் எல்லாம் திருப்புகழ் பாடும் - அங்கே
தனை மறந்து மயில்கள் எல்லாம் நாட்டியம் ஆடும்!
(தணிகை மலை)

கனிவுடனே முருகவேளும் சிரித்திடும் காட்சி - அதைக்
காண்பவர்க்கு எந்தநாளும் இல்லையே வீழ்ச்சி!
(தணிகை மலை)

விளங்கிவரும் சேவற்கொடி விண்ணதில் ஆடும் - அது
வேல்முருகன் அடியவர்தம் வினையினைச் சாடும்!
(தணிகை மலை)

குலுங்கி வரும் தென்றல் அங்கே இசை முழக்கும் - திருக்
குமரன் பேரைச் சொல்லிச் சொல்லி நம்மை மயக்கும்!
(தணிகை மலை)




குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
வரி: எழில் மணி

Monday, April 25, 2011

சாயி பாபாவின் குரலில் முருகன் பாட்டு!

மறைந்த பெருமகனார், "மனிதர்", சத்ய சாயி பாபாவின் இன்னுயிர்,
இறைவனது திருவடி நீழலில் இளைப்பாறட்டும்!

அவரைப் பற்றி, பலரும் பலவும், புகழ்ந்தும் இகழ்ந்தும் பேசினாலும், காணொளியில் நுணுக்கினாலும்....
ஒரே புள்ளி: Sai Baba is "also" a Social Worker! So, let his soul rest in peace!

* "ஸ்வாமி நீலு" என்று கிராமத்துப் பெண்கள் சொல்லும் வறண்ட கிராமக் குடிநீர்
* மாணவர்களிடம் வசூல் செய்யாத "கல்வித் தந்தை"
* நோயாளிகளிடம் வசூல் செய்யாத "மருத்துவத் தந்தை"
* Very few places in India for a free open heart surgery!
* தமிழால் வளர்ந்து தமிழரை அழிப்பது போல், ஆன்மீகத்தால் வளர்ந்து ஆன்மீகத்தை அழிக்கவில்லை!

பெரியவர் இரணியகசிபு: "அஹம் பிரம்மாஸ்மி = நான் கடவுள்!"
பிள்ளைப் பிரகலாதன்: "மனிதன் குற்றங் குறை உடையவனே! அவன் 'பகவான்' அல்லன்! பகவானை அடைபவன்!"

மனிதரை மரணத்திலே இழிவு செய்யாமல்
அவர் ஆன்மா அமைதியுற வேண்டுவோம்!!
சத்ய சாயி பாபா அவர்கட்கு அஞ்சலி!
அவர் குரலில் ஒலிக்கும், முருகன் பாடல்.....இன்று இங்கே! இதோ!



சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாதா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாதா சுப்ரமண்யம்

சிவ சிவ சிவ சிவ சுப்ரமண்யம்
ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம்
ஹர ஹர சிவ சிவ சுப்ரமண்யம்
சிவ சிவ ஹர ஹர சுப்ரமண்யம்

சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாதா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாதா சுப்ரமண்யம்

சிவ சரவணபவ சுப்ரமண்யம்
குரு சரவணபவ சுப்ரமண்யம்
குரு சரவண பவ சுப்ரமண்யம்
சிவ சரவண பவ சுப்ரமண்யம்

சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாதா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாதா சுப்ரமண்யம்

**

நண்பர் இரவிசங்கரின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது இடுகையை இங்கே இடுகிறேன்.

Friday, April 15, 2011

வள்ளலார் சினிமாப் பாடல்! - உள்ளொன்று வைத்து...



ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்!

பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்து யான் ஒழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!

மருவு பெண்ணாசை மறக்க வேண்டும்
உனை என்றும் மறவாது இருக்க வேண்டும்
மதி வேண்டும், நின் கருணைநிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்!

தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே!!

ராகம்: பிலஹரி
நாதசுரம்: காருக்குறிச்சி அருணாசலம்

வரி: வள்ளலார் (திருவருட்பா - தெய்வமணி மாலை)
குரல்: சூலமங்கலம் ராஜலட்சுமி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
படம்: கொஞ்சும் சலங்கை


Tuesday, April 05, 2011

முருகன் என்னும் ஒரு அழகன்!



இந்த காவடிச் சிந்து பாடலை அழகாக பாடித் தந்திருப்பவர், மீனா சங்கரன். அவருக்கு நமது மனமார்ந்த நன்றிகள்.

Get this widget | Track details | eSnips Social DNA


முருகன் என்னும் ஒரு அழகன்
அவன் பழகும் அழகில் மிக இனியன்
தந்தை நுதல் தந்த கனல் தன்னில் மணம் வீசும் மலராய் அவன்
உதித்தான் இதழ் விரித்தான்
சிரித்தான் அவன் மணத்தான்

சரவணப் பொய்கையில் பிறந்தான்
அவன் ஆறுரு வாகவே பிரிந்தான்
கங்கை பெண்டிர் தம் சிசு வாகி அவர் அன்பில் வச மாகி
தவழ்ந்தான் அவன் வளர்ந்தான்
மகிழ்ந்தான் அவன் சிறந்தான்

உமையவள் குமரனை கண்டாள்
அவனைக் கண்டதும் பேரன்பு கொண்டாள்
மைந்தன் அறுமுகனை இரு கரத்தால் அவள் எடுத்தாள் சேர்த் தணைத்தாள்
ஒன்றாய் மிக நன்றாய்
கண்டாய் மலர்ச் செண்டாய்

வேலொடு மயில் தனில் ஏகும்
அவன் பதங்களே வழித் துணையாகும்
செந்தில் முருகன் எனும் அழகன் அவன் கந்தன் எனும் கருணை குகன்
குளிர்வான் மனம் மகிழ்வான்
கனிவான் அருள் பொழிவான்


--கவிநயா

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP