Tuesday, September 28, 2010

வை+ணவ முருகா வருகவே! வாராதிருக்க வழக்குண்டோ?

பல சமயங்களில் மனம் பேதலிக்கும் போது, நமக்குன்னே இருக்கும் ஒரு ஜீவன், இங்கே, இப்போது வந்தால், எவ்வளவு இதமா இருக்கும்?
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவேனே! தூங்குவது போல் தூங்கினாலும், அப்பப்போ அவன் மடியிலிருந்தே அவன் முகத்தை அரைக் கண்ணால் முழுங்குவேனே!

-
இப்படியெல்லாம் ஏக்கம் வந்தால், அப்போது என் நெஞ்சில் ஓடும் பாட்டு.......இது தான்!

இந்த முருகன் பாட்டை எழுதியவர் ஒரு "வைணவர்"!
அப்படி-ன்னு உலகம் முத்திரை குத்தி வச்சிருக்கு!
வை+நவமோ, வையாத+நவமோ...
இந்த வைணவத்தை என் முருகன் தழுவிக் கொண்டான்!

அந்தக் கதை அங்கே! அந்தப் பாடல் இங்கே!




பேராதரிக்கும் அடியவர் தம்
பிறப்பை ஒழித்துப் பெருவாழ்வும்

பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
பெருமான் என்னும் பேராளா!!

சேரா நிருதர் குல கலகா,
சேவற் கொடியாய்த் திருச்செந்தூர்த்

தேவா, தேவர் சிறைமீட்ட
செல்வா என்று உன் திருமுகத்தைப்


பாரா மகிழ்ந்து முலைத் தாயார்
பரவிப் புகழ்ந்து விருப்புடன் அப்பா

வா வா என்று உன்னைப் போற்றப்
பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால்


வாரா திருக்க வழக்கு உண்டோ?
வடிவேல் முருகா வருகவே


வளரும் களபக் குரும்பை முலை
வள்ளிக் கணவா வருகவே!!



பாடல்: திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ்
பாடியது: பகழிக் கூத்தர்

வைணவன் என்று சிலர், இகழிக் கூத்தனாய் இகழ்ந்தாலும்,
வை+நவா என்று அவன், பகழிக் கூத்தனை அணைத்துக் கொண்டான்!

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவேனே!
தூங்குவது போல் தூங்கினாலும், அப்பப்போ அவன் மடியிலிருந்தே அவன் முகத்தை அரைக் கண்ணால் முழுங்குவேனே!
வாரா திருக்க வழக்கு உண்டோ? வடிவேல் முருகா வருகவே!!
பாரா திருக்க அறுமுகம் ஏன்?
பேதையைப் பார்க்க வருகவே!!

Tuesday, September 14, 2010

வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

அரோகரா!! அரோகரா!! அரோகரா!! அரோகரா!!
அரோகரா!! அரோகரா!!

சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செய்யும் முக ...... மலராறும்
அரோகரா!!

சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள ...... இருதாளும்
அரோகரா!!

ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும்
அரோகரா!!

ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும் (இது விராலிமலை திருப்புகழ்)



அரோகரா!!

முருகா! முத்துக்குமரா!! வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

எண்ணங்கள் ஈடேற எங்களுள்ளம்தான் மகிழ
எண்ணை அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----எண்ணை அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

பாசமெல்லாம் பொங்குதப்பா வாசனைப்பொடி அபிஷேகம்,
பாசமெல்லாம் பொங்குதப்பா வாசனைப்பொடி அபிஷேகம்
பாபம் தீர உன்னைக்காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----உன்னைக்காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

மலர்களெல்லாம் உனக்காக மகிழ்வுடனே தேன் சிந்தும்
மலர்கள் எல்லாம் உனக்காக மகிழ்வுடனே தேன் சிந்தும்
தேனாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----தேனாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

சந்திரனோ சூரியனோ தந்த நிறம் சந்தனமோ,
சந்திரனோ சூரியனோ தந்த நிறம் சந்தனமோ
சந்தனாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----சந்தனாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

பத்துக் காதம் மணக்குதப்பா! பன்னீரின் வாசமப்பா!!
பத்துக் காதம் மணக்குதப்பா! பன்னீரின் வாசமப்பா!!
பன்னீரபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----பன்னீரபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

இளகுதப்பா கல்மனமும் இளையவனே உனைக்காண,
இளகுதப்பா கல்மனமும் இளையவனே உனைக்காண
இளநீரபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----இளநீரபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

தனித்து நின்ற இளையவனே,தண்டாயுதம் தரித்தவனே!!
தனித்து நின்ற இளையவனே,தண்டாயுதம் தரித்தவனே!!
தயிரால் அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----தயிரால் அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

தஞ்சமென்று வருவோர்க்கு வஞ்சமில்லா தருள்பவனே
தஞ்சமென்று வருவோர்க்கு வஞ்சமில்லா தருள்பவனே
பஞ்சாம்ருத அபிஷேகம் காண புண்ணியம்செய்தோம்
நாங்கள்----பஞ்சாம்ருத அபிஷேகம் காண புண்ணியம்செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

பண்டாரம் ஆனதனால் வீபூதி அபிஷேகம்,
பண்டாரம் ஆனதனால் வீபூதி அபிஷேகம்
விபூதி அலங்காரம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----விபூதி அலங்காரம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

புண்ய தீர்த்தம் பல சேர்த்து புனித வேதத் தமிழ்வேதம்
புண்ய தீர்த்தம் பல சேர்த்து புனித வேதத் தமிழ்வேதம்
கும்பாபிஷேகமும் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----பூர்ண அபிஷேகமும் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

முத்துக்குமரா!! முத்துக்குமரா!! முத்துக்குமரா!! முத்துக்குமரா!!
முத்துக்குமரா!! முத்துக்குமரா!! முத்துக்குமரா!! முத்துக்குமரா!!
அரோகரா!அரோகரா!!அரோகரா!!! அரகரோகரா!!!




......... சொல் விளக்கம் .........

சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார ...
வரிசையானதும், ஆடம்பரமுள்ள ஒன்பது மணிகள் பதிக்கப்பெற்ற பெருமை பொருந்திய கிரீடங்களின் கனத்தை உடையதும்,

வெகு வித தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும் ...
பல வகையான தேவாதி தேவர்களெல்லாம் வணங்குவதுமான ஆறு திரு முகங்களையும்,

சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் ...
சிறப்பு உற்று ஓங்கும் வீர லக்ஷ்மி குடிகொண்டிருக்கும் பன்னிரு
தோள்களையும்,

நீளும் வரி அளி சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும் ...
நீண்ட ரேகைகள் உள்ள வண்டுகள் ஸ்ரீராகம் என்னும் ராகத்தைப் பாடி ரீங்காரம் செய்யும் கடப்ப மலரின் மணம் வீசும் இரண்டு திருவடிகளையும்,

ஆராத காதல் வேடர் மட மகள் ஜீமூதம் ஊர் வலாரி மட மகள் ... முடிவில்லாத ஆசையை உன் மீது கொண்ட வேடர்களின் இளம் மகளான வள்ளியும், மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனுடைய அழகிய பெண்ணாகிய தேவயானையும்,

ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும் ...
பக்தர்களின் பற்றுக் கோட்டின் இருப்பாக வலது பாகத்திலும்,
இடது பாகத்திலும் உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும்,

ஆராயும் நீதி வேலும் மயிலும் ...
நன்கு ஆராய்ந்து நீதி செலுத்தும் உனது வேலையும் மயிலையும்,

மெய்ஞ் ஞான அபிராம தாப வடிவமும் ...
ஞான ஸ்வரூபியான கீர்த்தி பெற்ற உனது பேரழகுடைய திருவுருவத்தையும்,

ஆபாதனேனும் நாளும் நினைவது பெற வேணும் ...
மிகக் கீழ்ப்பட்டவனாக நான் இருப்பினும், நாள் தோறும்
(மேற்சொன்ன அனைத்தையும்) தியானம் செய்யும்படியான பேற்றைப் பெற வேண்டுகிறேன்.

***

திரு. பித்துக்குளி முருகதாஸ் ஐயாவும் குழுவினரும் பாடிய இந்தப் பாடலையும் வரி வடிவத்தையும் அனுப்பிய திரு. பிரகாசம் ஐயாவிற்கு நன்றி.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP