Wednesday, June 24, 2009

சிந்தைக்கு உகந்தவனே கந்தனே குகனே


நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த
நீ தான் எனக்கருள வேண்டும் - முருகா (நீல)

நீலத் திருமாலின் சிந்தை மகிழ் மருகா
சேவற்கொடி அழகாய் தாங்கி நிற்கும் சண்முகா (நீல)

வேலினைக் கையில் ஏந்தும் வேலவனே எழில்
வேழ முகம் படைத்தோன் சோதரனே
வேல் விழி குறமாதின் மணாளனே என்
சிந்தைக்கு உகந்தவனே கந்தனே குகனே (நீல)




பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

Wednesday, June 17, 2009

சிவசண்முகனுக்கு ஈடு யாரும் இல்லை!!


சுவாமிமலை எங்கள் சுவாமிமலை சிவ
சண்முகனுக்கு ஈடு யாரும் இல்லை (சுவாமிமலை)

சப்தங்களின் தொடக்கம் பிரணவமாம்
சாரம் தெரியாமல் திகைத்தனராம்
சத்தியலோகத்து பிரம்மனுமே
சரவணன் கையாலே சிறைப்பட்டான் (சுவாமிமலை)

சங்கரன் செவியினில் உமைபாலன்
சாற்றும் உபதேசன் ஓம் நாதம்
சாமிமலை தகப்பன் சாமிமலை
சன்னிதி வந்தவர்க்கு ஏது குறை (சுவாமிமலை)




பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP