Tuesday, March 31, 2009

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!

நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!

பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!


விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
முருகன் விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!


மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!




திரைப்படம் - கந்தரலங்காரம்
இசை - குன்னக்குடி வைத்தியநாதன்

Sunday, March 29, 2009

மாலைப் பொழுதினிலே ஒரு நாள்


இன்று கிருத்திகை திருநாள். இன்று முருகனை நினைக்கும் நேரத்தில் திரு. கல்கி என்கிற ரா.கிருஷ்ணமுர்த்தி அவர்களின் ஒரு பாடலை பார்ப்போம் கேட்போம்.கல்கி என்றாலே அவர் கதை அதுவும் சரித்திர கதை மட்டும்தான் எழுதுவார் என்று நினைக்கவேண்டாம். கவிதைகளும் சிறப்பாக எழுதுவார்.பாடல் இதோ மலை போல வந்த துன்பத்தை மாதயயை புரிந்து பனிபோல நீக்கியதற்கு நன்றியாக.


ராகம்: செஞ்சுருட்டி

மாலைப் பொழுதினிலே-- ஒருநாள்

மலர் பொழிலினிலே

கோலக் கிளிகளுடன் -குயில்கள்

கொஞ்சிடும் வேளயிலே



மாலை குலவு மார்பன் --மருவில்

மாமதி போல் முகத்தான்

வேலொன்றும் கையிலேந்தி-- என்னையே

விழுங்குவான் போல் விழித்தான்



ராகம்: பெஹாக்


நீலக் கடலினைப் போல் என் நெஞ்சம்

நிமிர்ந்து பொங்கிடவும்

நாலு புறம் நோக்கி-- நாணி நான்

யாரிங்கு வந்த"தென்றேன்.


"ஆலிலை மேல் துயின்று-- புவனம்

அனைத்துமே அளிக்கும்

மாலின் மருமகன் யான் -- என்னையே

வேலன்! முருகன்! என்பார்.



ராகம்: சிந்து பைரவி


சந்திரன் வெள்குறும் உன்முகத்தில்

சஞ்சலம் தோன்றுவதேன்?

தொந்தம் இல்லாதவளோ-- புதிதாய்

தொடர்ந்திடும் உறவோ..?


முந்தைப் பிறவிகளில் உன்னை நான்

முறையினில் மணந்தேன்

எந்தன் உயிரல்லவோ-- கண்மணி

ஏனிந்தஜால"மென்றான்.


ராகம்: மோஹனம்
உள்ளம் உருகிடினும்-- உவகை

ஊற்றுப் பெருகிடினும்

கள்ளத் தனமாக-- கண்களில்

கனல் எழ விழித்தேன்.



புள்ளி மயில் வீரன் -- மோஹனப்

புன்னகைதான் புரிந்தான்

துள்ளி அருகில் வந்தான் -- என் கரம்

மெள்ளத் தொடவும் வந்தான்.


ராகம் : மாயா மாளவ கௌளை


பெண்மதி பேதமையால்-- அவன் கை

பற்றிடுமுன் பெயர்ந்தேன்!

கண் விழித்தெ எழுந்தேந் - துயரக்

கடலிலே விழுந்தேன்



வண்ண மயில் ஏறும் பெருமான்

வஞ்சனை ஏனோ செய்தான்?

கண்கள் உறங்காவோ அக்குறை

கனவைக் கண்டிடேனோ?


திரு. டி. எம். கிருஷ்ணா அவர்களின் குரலில்

-
இதே பாடலை திருமதி எம்.ஸ். அம்மாவின் குரலில் இங்கே கேட்கலாம்">

Wednesday, March 25, 2009

திருமுருகன் மேல் ஒரு சௌராஷ்ட்ரப் பாடல்

முருகப்பெருமான் மீது இயற்றப்பட்டுள்ள சௌராஷ்ட்ர மொழிப் பாடல்களைப் பற்றி வெகு நாட்களுக்கு முன்னர் நண்பர் சிவமுருகனிடம் கேட்டிருந்தேன். அப்போது அவரிடம் இந்தப் பொத்தகம் இல்லாததால் உடனே தர இயலவில்லை. எப்போதோ கேட்டதை நினைவில் நிறுத்திக் கொண்டு இப்போது இந்தப் பாடலை அவர் அனுப்பியிருக்கிறார். சிவமுருகனுக்கு மிக்க நன்றி.


கீ3த்: ஸோ ஸிரஸ் ஸேஸ்தெ தே3வுக் நமஸ்காரு
ஒத்3தி3து : கஸின் ஆனந்த3ம்
பஸ்தவ் : கஸின் ஆனந்த3ம் கீ3துன் (பை2ல நிம்பி3னி)
ஒர்ஸு: ஸௌராஷ்ட்ர விஜயாப்தம் : 678(1990)


பாடல்: ஆறுமுகம் கொண்ட தெய்வத்திற்கு வணக்கம்
இயற்றியவர்: காசி. ஆனந்தம்
பொத்தகம்: காசி. ஆனந்தம் பாடல்கள் (முதல் பதிப்பு)
வருடம்: சௌராஷ்ட்ரர் வருகையாண்டு 678 (ஆங்கில ஆண்டு: 1990)

ஸோ ஸிரஸ் ஸேஸ்தெ தே3வுக் நமஸ்காரு
சொண்டிபதி பை4கு நமஸ்காரு


ஸோ - ஆறு
ஸிரஸ் ஸேஸ்தெ – முகம் கொண்ட
தே3வுக் - தெய்வத்திற்கு
நமஸ்காரு - வணக்கம்
சொண்டிபதி பை4கு - தும்பிக்கையானின் உடன்பிறந்தானுக்கு
நமஸ்காரு – வணக்கம்

ஆறுமுகம் கொண்ட தெய்வத்திற்கு வணக்கம்
தும்பிக்கையானின் உடன்பிறந்தானுக்கு வணக்கம்


பொள்ளொ பஜெ மெனி பு4லோக் சுட்டு பி2ரெ
பொளனி தே3வுகு நமஸ்காரு

பொள்ளொ - (ஞானப்)பழம்
பஜெ மெனி - வேண்டுமென
பு4லோக் - உலகை
சுட்டு பி2ரெ - வலம் வந்த
பொளனி தே3வுகு - பழனி ஆண்டவனுக்கு
நமஸ்காரு – வணக்கம்

பழம் வேண்டுமென உலகை வலம் வந்த
பழனி ஆண்டவனுக்கு வணக்கம்

ஓம் மெனஸ்தெ அட்சரும் ஹிப்3பி3ரெஸ் தெனொ
உமாபதிகு உபதே3ஸ் கெரஸ் தெனொ
அருணகிரிகு அமர்த்து தமிழ் தி3யேஸ் தெனொ
அம்ர ஜிவ்னமு ஜீவாமிர்த்து ஹொயெஸ் தெனொ

ஓம் மெனஸ்தெ - ஓம் என்ற
அட்சரும் - எழுத்தில்
ஹிப்3பி3ரெஸ் தெனொ - நிற்பவன் அவன்
உமாபதிகு - உமாபதி மஹேஸ்வரனுக்கு
உபதே3ஸ் கெரஸ் தெனொ - உபதேசம் செய்தவன் அவன்
அருணகிரிகு - அருணகிரிக்கு
அமர்த்து தமிழ் - அமுதத் தமிழ்
தி3யேஸ் தெனொ – தந்தவன் அவன்
அம்ர ஜிவ்னமு - நம் வாழ்வுக்கு
ஜீவாமிர்த்து ஹொயெஸ் தெனொ - உயிரமுதம் ஆனவன் அவன்

ஓம் என்ற எழுத்தில் நிற்பவன் அவன்
உமாபதிக்கு உபதேசம் செய்தவன் அவன்
அருணகிரிக்கு அமுதத் தமிழ் தந்தவன் அவன்
நம் வாழ்வுக்கு உயிரமுதம் ஆனவன் அவன்


கொரி தபஸ் கெரெ
கொப்பான் சமியாருகு
கௌ2னஸ் போகும் வாட் ஸங்கெ3
கௌ3ரி பெ3டாகு நமஸ்காரு

கொரி - உருகி
தபஸ் கெரெ – தவம் செய்த
கொப்பான் சமியாருகு - நாயகி சுவாமிகளுக்கு
கௌ2னஸ் போகும் - கிழக்குத் திசையில்
வாட் ஸங்கெ3 - வழி காட்டிய
கௌ3ரி பெ3டாகு - கௌரி மகனுக்கு
நமஸ்காரு – வணக்கம்

உருகி தவம் செய்த
நாயகி சுவாமிகளுக்கு
கிழக்குத் திசையில் வழி காட்டிய
கௌரி மகனுக்கு வணக்கம்

(ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் திருப்பரங்குன்றத்தில் 12 வருடங்கள் கடும் தவம் இயற்றி வந்தார். குன்றத்துக் கிழவோன் உருவிலி வாக்காக (அசரீரி வாக்காக) மதுரைக்குக் கிழக்கே இருக்கும் பரமகுடியில் வாழ்ந்த ஸ்ரீ நாகலிங்க அடிகளாரைக் குருவாக அடையுமாறு அருளினான். அடிகளாரிடம் நாயகி சுவாமிகள் அட்டாங்க யோகம் பயின்று பல ஆண்டுகளில் கற்றுத் தேற வேண்டியவற்றைப் பதினெட்டே நாட்களில் தேர்ந்து சித்தி பெற்று அடிகளாரின் திருவாக்கினால் 'சதானந்த சித்தர்' என்ற திருப்பெயர் பெற்றார்)

தமிழ் இலக்கணப்படி எதுகை மோனைகளுடன் இப்பாடல் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். நாயகி சுவாமிகளின் பாடல்களும் பெரும்பாலும் எதுகை மோனைகளுடன் அமைந்திருக்கும்.

Tuesday, March 03, 2009

வேலவனே உனக்கு வேலை என்னவோ சொல்லு


இன்று கிருத்திகை திருநாள்.குமரனுக்கு உகந்த நாள். இப்போது நாங்கள் இருக்கும் சிங்கையில் வீட்டுக்கு அருகில் ஒரு முருகன் கோவில். செங்காங் முருகன் கோவில். கோவிலின் தோற்றம் கீழே இருந்து பார்த்தால் இப்படி இருக்கிறது.

முருகன் கோவில் பதிவு நாளை பார்க்கலாம்
இசை உலகில் முடி சூடா மன்னர்களாக இருந்த மூன்று எழுத்து மன்னர்கள் மூன்று பேர்கள். அவர்கள் தான் ""ஜிஎன்பி"" (ஜி என் பாலசுப்ரமனியன்) எம்டிஆர்(எம்.டி.ராமனதன்)எம்.எல்.வி(எம் எல் வசந்தகுமாரி) இப்பொழுதான் அன்னையின் பெயரை பெயருக்கு முன்னால் இனிஷியிலாக போட்டுக் கொள்ளலாம் என்று சட்டம் வந்து இருக்கிறது. ஆனால் 80 ஆண்டுகளுக்கு முன்னாலேயே மெட்றாஸ். லலிதாங்கி. வசந்தகுமாரி என்று தாயரின் பெயரை தன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்ட புரட்சி தலைவி.

அதுபோல எம்டிஆர் என்றாலே ஒரு தனிகூட்டத்தையே கட்டி ஆண்டவர்தான் எம். டி ராமனாதன் என்ற கலாஷேத்திரம் கண்ட கலைமாமணி.அவரது பாடல்களை ரசிக்க வேண்டுமென்றால் ஒருவர் சங்கீதம் கேட்பதில் பிஹெச்டி பட்டம் வாங்கியிருக்க வேண்டும்.எந்தபாட்டக இருந்தாலும் ஆரம்பம் முதல் கடைசிவரை எங்கு கேட்டாலும் ராக பாவம் ததும்பும்.கேரளாவில் பிறந்தாலும் அவர் தமிழில் பாடல்கள் இயற்றி மெட்டமைத்து பாடியுள்ளார்.

சஞ்சை சுப்ரமணியன் அவரது பரம ரஸிகன். அவரது பாடலை அவரைப்போலவே பாடியுள்ளார்.அதுவும் சஹாணா ராகத்தில் முருகன்மேல் அமைந்த பாடல். வேலவனே உனக்கு வேலை என்ன. ஜாலங்கள் செய்வதா. வள்ளியை காந்தர்வ திருமண முடித்ததா,அப்பன்மீது கோபம் கொண்டு மயில் மீது ஏறிக்கொண்டு மூன்று உலகங்களையும் சுற்றுவதா.அல்லது அவருக்கு பிரணவ உபதேசம் செய்ததா, மலைகளின் மீதெல்லாம் சென்று ஆட்டம் போட்டதா

குமாரவடிவேலனே அதைவிட முக்கியமான வேலை என்னைக் காப்பாற்றுவது இல்லையா? எனக்கு நல்லது ஒன்றும் தெரியாதே இருந்தாலும் என்னைக் காப்பாற்று என்று அருமையாக நையாண்டித்தனமாக சாடுகிறார் பாடுகிறார் . பார்த்து கேட்டுத்தான் பாருங்களேன்
ராகம்: சஹாணா தாளம் : ஆதி
பல்லவி
வேலவனே உனக்கு வேலை என்னவோ சொல்லு
ஜாலங்கள் செய்யாதே சிங்கார வடி வேலவனே.....(வேலவனே)
அனுபல்லவி
பாலசுப்ரமண்யா பார்வதி பாலனே
பரமேசன் தனக்கு உபதேசம் செய்தானே......(வேலவனே)
சரணம்
அன்று ஒரு குறத்தியை மணந்தாயே- நீயும்
முன்று லோகங்களுக்கும் மயில் மீது சென்றாயே
குன்றுதோறும் சென்று குழைவாக ஆடினாயே
சான்றொன்றும் தெரியேனே ஷண்முகத்தேவனே.....(வேலவனே)
-

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP