Friday, October 17, 2008

ஈழத்தமிழனின் வேண்டல்:

ஈழத்தமிழனின் வேண்டல்!
பழநிமலை முருகா பழம் நீ திருக்குமரா என்னும் மெட்டில்!



கதிர்காம வேல்முருகா
காப்பதுமுன் பாரமப்பா
எம்துயரம் நீக்கிடுவாய் - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா

போரும் ஓயாதோ விடியலும் வாராதோ
இடமின்றித் தவிக்கின்ற அவலமும் தீராதோ
நிலைமை சீராக நிழலும் நிஜமாக
நிம்மதியை எங்களுக்குத் தா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

இதுநாள் யாம்பட்ட இடரிங்கு போதாதோ
இப்படியே எம்மக்கள் அழிவதும் சரியாமோ
கருணைத் திருவுள்ளம் மிகுந்தவன் நீயல்லவோ
கண்மலரை திறந்திடப்பா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

சூரனை மாய்த்திடவே வேற்படை நீகொண்டாய்
சூரர்கள் பலவிங்கு எமையழிக்க வருகின்றார்
கதிர்காமப் படைவீட்டில் பாங்குடனே நீயிருக்க
எமக்கிந்த நிலை முறையோ - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

இப்படிக்கு நீயிருந்தால் என்செய்வோம் சொல்லப்பா
ஏனின்னும் மௌனமிங்கு எழுந்து நீ வா அப்பா
அழுகின்ற எம்மக்கள் துயர்நீக்க வேலெடப்பா
பரிந்தெம்மைப் பாரப்பா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

4 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) October 18, 2008 9:05 AM  

//நிம்மதியை எங்களுக்குத் தா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
//

ஹூஊஊஊம்...
தங்கள் வரிகளில் உள்ளது போலவே முதலில் நிம்மதி வரட்டும், பின்னர் ஈழம் எழட்டும்.

இதுக்கெல்லாம் முருகன் மேல பாடுவாங்களா என்று சிலர் நினைக்கலாம் SK!
ஆனால் அடியேன் அப்படி நினைக்கவில்லை! பிரார்த்தனைகள் மலைகளையும் அசைக்க வல்லன என்பது விவிலிய வாசகம்!

SurveySan October 18, 2008 6:06 PM  

Prayer is not the answer ;)

http://surveysan.blogspot.com/2008/10/blog-post_14.html

Kannabiran, Ravi Shankar (KRS) October 19, 2008 1:13 PM  

//SurveySan said...
Prayer is not the answer ;)//

Surveys annachi
Prayer is not the answer
but is an answer to the answer :)

VSK October 20, 2008 10:30 AM  

வேண்டலில் நம்பிக்கை வைப்பவர்கள் வேறென்ன செய்வார்கள்! வேண்டத்தான் செய்வார்கள்! நிகழும்! பலிக்கும் எம் வேண்டலும்! அனைவருக்கும் நன்றி!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP