Saturday, July 26, 2008

செந்தில்நகராதிபனை சிந்தை செய்வாய் மனமே தினமே.

திருத்தணி முருகனுக்கு அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா



இன்று ஆடிக்கிருத்திகை. முருகன் இருக்கும் எல்லா தலங்களிலும் விசேஷம்தான். ஆனாலும் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுவது ஆறுபடை வீடுகளில் ஒன்றானதிருத்தணிகையில்தான்.பால்காவடிகளும் பன்னீர்காவடிகளும் ஆயிரக்கணக்கில் பவனிவர லக்ஷம்பேர்களுக்கு மேல் திருத்தணியில் கூடும் தினம்."திருத்தணி முருகனுக்கு அரோஹரா' என்ற கோஷம் வானைப் பிளக்கும்.வள்ளி தெய்வயானையுடன் அபிஷேக அலங்காரங்களுடன் முருகன் அழகனாக காட்சி தரும் நாள். சிறுவர்கள்கூட காவடி எடுத்து ஆடிவருவார்கள்








பக்தர் கூட்டமெல்லாம்"கந்தா வந்து அருள் தரலாகாதா' என்று கதறி கண்ணீர்மல்க கைகூப்பி வணங்குவார்கள்.ஊரே திருவிழாக்கோலம் பூண்டு எங்கும் ஆனாந்தவாரிதியாக இருக்கும். நீங்க கூட்டத்துக்குள் போய் அழகனைப் பார்க்க வேண்டாம் இங்கேயே அமைதியாக தரிசனம் செய்துகொள்ளுங்கள்.











ராகம்:- ஆரபி தாளம்:-ஆதி

பல்லவி

திருத்தணி முருகன் திருவருள் புரிவான்

திருமால் மகிழும் அருமை மருகன் (திருத்தணி)

அனுபல்லவி

அறுபடை வீட்டின் நாயகனே

குறவஞ்சி வள்ளியின் காவலனே (திருத்தணி)

சரணம்

குறுநகை புரிந்திடும் அருள்முகமும்

பரிவுடன் உதவும் பன்னிருகரமும்

வீருடன் தோன்றும் வெற்றி வடிவேலும்

என்றென்றும் என்னைக் காத்திடுமே (திருத்தணி)



இன்று கிருத்திகை(27/07/08). வழக்கம்போல் பதிவு முருகன் அருளால்.இன்று கேட்கப் போகும் பாடல் திரு. பாபநாசம் சிவன் அவர்களுடையது.இதைப் பாடியிருப்பவர் சிவன் அவர்களுடன் நெடுநாட்கள் வாழ்ந்து அவர்பாடல்களை எழுத்துவடிவில் வெளியிடக் காரணமானவர், அவரின் சிஷ்யருமானவர். அவர்தான் திரு செதலபதி. பாலசுப்ரமணியன்.

அப்பா முருகா உன் சோதனை சுமை விளையாட்டுக்கு இந்தா ஏழைதான் கிடைத்தேனா.உன்னுடைய பாதகமலம் மறவாத என்னுடைய பாதக மலத்தை போக்கமாட்டாயா. பதகமலம் என்ற வார்த்தையில் சொல் விளையாட்டு அபாரம்.என்னுடைய வினை உன்னுடைய அருளைக்காட்டிலும் வலிமை கொண்டதா? இரக்கமேஇல்லயா உனக்கு? வா குமரா, பலா,வேலா வந்து காப்பாய்.



ராகம்:- காபி தாளம்:- ஆதி




பல்லவி



சோதனைச் சுமைக்கிவ் வேழை ஆளா



ஸ¤ப்ரம் மண்ய தாளாச் (சோதனை)



சரணம்



பாத கமலம் மறவாத அடிமை என்பாதக மலம் அகலாதா வாதா (சோதனை)



உனதருளினும் என் வினைவலி பெரிதோ



உனக்கிரக்க மில்லையோ கந்தா வந்தாள் (சோதனை)



காம ஸம்ஹார சிவகுமரா குருபரா

ராமதாஸன் பணியும் பாலா வேலா (சோதனை)





<"திருமதி மும்பை ஜெயச்ரீ குரலில் இங்கே கேளுங்கள்">">



திரு. பாலுவின் குரலில்">

4 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) July 26, 2008 9:09 PM  

முதல்ல ஒரு பாடல் ஆரபியில் கொடுத்திருக்கீங்களே? அது சென்ற கிருத்திகையின் கணக்கில் வரவு வைத்துக் கொள்ள வேண்டுமா?:)

வரதரு மருகன்-வர தரு முருகன்
அவன் பற்றிலே வரவு வைத்து விடுவோம்!
இந்தப் பதிவு 102! :)

Kannabiran, Ravi Shankar (KRS) July 26, 2008 9:15 PM  

//பாத கமலம் மறவாத அடிமையின்
பாதக மலம் அகலாதா வா தா//

மிகவும் அருமை!

பாத கமலம் சேர்ந்தால்
பாதக மலம் அறுத்து
பாதகம் அலம் பிடுவான்-ஞான
போதகம் சிலம் பிடுவான்!

குமரன் (Kumaran) July 27, 2008 8:41 AM  

மிக அருமையான பாடலை அறிமுகம் செய்தீர்கள் தி.ரா.ச. நன்றி.

பாத கமலம் மறவாத அடிமை பாதக மலம் அகலவேண்டும் என்றும் உனது அருளினும் எனது வினையின் வலிமை பெரிதா என்றும் மிக நன்றாக மன்றாடுகிறார் இராமதாஸர்.

மெளலி (மதுரையம்பதி) July 27, 2008 12:46 PM  

நல்ல பாடலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி திராச.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP