Saturday, April 05, 2008

முருகா முருகா என்றால்

செந்தில் வாழ் நகர் தேவாதி தேவன் முருகனுக்கு அரோகரா



நாளை கிருத்திகைத் திருநாள் . வழக்கம்போல் பதிவு. முருகனடி பணியும் வாய்ப்பு.அருமையான சாவேரி ராகத்தில் முருகனின் இரக்க குணத்தை புகழ்ந்து பாடிய ஒருபாடல். பாடலை எழுதியவர் திரு. பெரியசாமி தூரன் அவர்கள்.
முருகா முருகா என்று கூறினாலே உந்தன் உள்ளம் உருகிவிடும் நான் இப்படி உருகி அழைத்தால் பரிவோடு வரமாட்டாயா? வராமல் எங்கே போய்விடுவாய். ஒருதரம் உன்னிடம் என் குறையைச் சொன்னாலும் அல்லது உன்னுடைய பாதத்தை நினந்தாலும் அருள் தரும் கந்தா நான் இப்படி அல்லும் பகலும் உன் நாமத்தை சொல்லும்போது வரமலிருக்கலாமா.
ஒருவேளை, அறியாமல் நான் செய்த பிழைக்காக என்னை நீ வெறுக்கின்றாயோ அதனால்தான் அழகே உருவான ஐய்யா உனக்கு கோபம் வந்ததோ. எப்படியிருந்தாலும் சிறியவனான நான் செய்த பிழையைப் பொறுத்து அருள்செய்யப்பா வளமை பொருந்திய தெருச்செந்தூர் நகரத்தின் அதிபதியே தேவர்களுக்கெல்லாம் தேவனே.

இப்படி தனித்தமிழில் இனிமையாகவும், உள்ளம் உருகிப் பாடினால் கந்தன் வராமலா இருப்பான் இனிபாடலை பாருங்கள். கந்தன் வராவிட்டாலும் குமரனும்,குமரனின் மாமவும்(ராகவன்) வருவார்களா பார்ப்போம்?



ராகம்: சாவேரி தாளம்:ஆதி
பல்லவி
முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்
வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வாரயோ...(முருகா முருகா என்றால்)


அனுபல்லவி

ஒருகால் முறைசெய்தாலும் நின்பதம் நினைந்தாலும்

அருளே தந்திடும் கந்தா அல்லும் பகலும் நான்....(முருகா முருகா என்றால்)

சரணம்
தெரியாது நான் செய்த பிழையால் நீ வெறுத்தாயோ
அன்பேவடிவம் கொண்ட அழகா நீ சினந்தாயோ
சிறியேன் என் குறையெல்லாம் பொறுத்தே அருள் செய்வாய்
செந்தில் மாநகர் வாழும் தேவாதி தேவனே.....(முருகா முருகா என்றால்)





-

-/<" திருமதி. மும்பைஜெயச்ரீ குரலில் இங்கே கேளுங்கள் ">

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP