Thursday, June 21, 2007

அன்பிற்கு இல்லை பஞ்சம்!


=================================================
அன்பிற்கு இல்லை பஞ்சம்!

இன்று ஷஷ்டி தினம். எம்பெருமான் முருகனுக்கு
உகந்த நாள். முருகனின் பெருமையைச் சொல்லும்
பாடல் ஒன்றின் வரி வடிவத்தையும் ஒலி வடிவத்
தையும் பதிவிட்டு மகிழ்கின்றேன்.

அன்பர்கள் அனைவரையும் பாடலைப் படித்தும்,
கேட்டும் இன்புற வேண்டுகிறேன்.

"உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை -
அங்கு உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!"
என்று கவிஞர் குறிப்பிட்டுள்ளது பாடலின்
முத்தாய்ப்பான வரிகளாகும்
-----------------------------------------------------------
"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

திருச்செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ்பாடியே கடலாடும்
திருச்செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ்பாடியே கடலாடும்

பழநியிலே இருக்கும் கந்தப்பழம் - நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப்பழம்
பழநியிலே இருக்கும் கந்தப்பழம் - நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப்பழம்

பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்தபழம் -
பக்திப்பசியோடு வருவோர்க்கு ஞானப்பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்தபழம் -
பக்திப்பசியோடு வருவோர்க்கு ஞானப்பழம்

சென்னையிலும் கந்த கோட்டமுண்டு - உன்
சிங்கார மயிலாடத் தோட்டமுண்டு
சென்னையிலும் கந்த கோட்டமுண்டு - உன்
சிங்கார மயிலாடத் தோட்டமுண்டு

உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!"

பாடல் ஆக்கம்: கவிஞர். பூவை செங்குட்டுவன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்
பாடியவர்கள்: சூலம்ங்கலம் சகோதரிகள்.

அன்புடன்,
அடியார்க்கு அடியவன்,
SP.VR.சுப்பையா
கோயமுத்தூர்.
===========================================


Get Your Own Music Player at Music Plugin

Sunday, June 03, 2007

48. இளையராஜாவே எழுதிப் பாடியது

சில சமயங்களில் சில பாடல்கள் மிகவும் அபூர்வமாக அமைந்துவிடுவதுண்டு. ஆமாம். மிகப் பிரபலமான பாடகராக இருப்பார். மிகப் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பார். ஆனால் ஒரு பாட்டுதான் இருவரும் இணைந்து வெளிவந்திருக்கும்.

முருகன் மேல் பல பாடல்கள் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன். இவர் இளையராஜா இசையில் இரண்டே பாட்டுகள்தான் பாடியிருக்கிறார். பத்ரகாளி படத்திற்காக ஒன்று. "ஆடுகிறாள் ஓடுகிறாள்" என்ற பாடல். தாய் மூகாம்பிகை படத்திற்காக ஒன்று. இது வேறொரு விதத்திலும் அபூர்வப் பாடல். மெல்லிசை மன்னர், பாலமுரளி கிருஷ்ணா, சீர்காழி கோவிந்தராஜன் ஆகிய மூவரும் இணைந்து பாடிய ஒரேயொரு பாடல். அதுவும் இசைஞானியின் இசையில்.

இன்னொரு அபூர்வப் பாடல் இளையராஜாவின் இசையில் உண்டு. ஆம். "சொல்லவல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ" என்ற பாரதியார் பாடல். கவரிமான் என்ற திரைப்படத்திற்காக வரலட்சுமி அவர்கள் பாடிய பாடல். வெள்ளிமலை மன்னவா என்று கணீர்க்குரலில் பாடிய இவர் இளையராஜாவின் இசையில் பாடிய முதற்பாடல் இது. இந்தப் பாடலின் எம்.பி.3 என்னிடம் இல்லை. யாரிடமாவது இருந்தால் gragavan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். இதற்குப் பிறகு குணா படத்திற்காக நான்கு வரிகள் பாடினார்.

இப்படி ஏதாவது காரணங்களால் அபூர்வப் பாடல்கள் அமைந்து விடுவதுண்டு. பல இசையமைப்பாளர்கள் இசையில் இப்படிப் பல பாடல்கள் இருந்தாலும் இப்பொழுது பார்க்கப் போகும் பாடல் இளையராஜாவின் பாடல். ஆம். அவரே எழுதி இசையமைத்துப் பாடிய....என்ன நிறைய பாடல்கள் இருக்கின்றனவா? சரி. முருகன் பாடல்? இசைஞானியின் இசையில் முருகன் பாடல் என்றால் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். மகராசன் படத்தில் ஒரு பாடல். அது தவிர அவரது கீதாஞ்சலி என்ற இசைக்கோர்ப்பில் உள்ள இந்தப் பாடல். "முருகனை நினை மனமே" என்று அவர் பாவத்தோடு பாடிய பாடல். அதைத்தான் இப்பொழுது கேட்கப் போகிறோம். கேட்கலாமா?








முருகனை நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே
முருகனை நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே

உருகிடும் மறுகணமே
உருகிடும் மறுகணமே
நெருங்கி வருவது அவன் குணமே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
முருகனை......நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே

ஒவ்வொரு நொடியிலும் அருகினில் இருப்பவன்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஒவ்வொரு நொடியிலும் அருகினில் இருப்பவன்
ஒவ்வொரு செயலிலும் பெருமை கொடுப்பவன்
உடலுக்கு உயிரென உயிருக்கு ஒளியவன்
உடலுக்கு உயிரென உயிருக்கு ஒளியவன்
உணர்ந்தவர் தொழுதிடும் உயர்ந்தவர் பரவிடும்
முருகனை......நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே

அழகனின் அழகினில் இருவிழி குளிர்ந்திடும்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
அழகனின் அழகினில் இருவிழி குளிர்ந்திடும்
அவன் விழி அசைவினில் கலைகளும் மலர்ந்திடும்
அவனருள் மழையினில் உணர்வுகள் சிலிர்த்திடும்
அவனருள் மழையினில் உணர்வுகள் சிலிர்த்திடும்
அறிவுடன் பொருள் புகழ் அனைத்திலும் சிறந்திட
முருகனை......நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே

உருகிடும் மறுகணமே
உருகிடும் மறுகணமே
நெருங்கி வருவது அவன் குணமே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
முருகனை......நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே

கேட்டீர்களா? இது போன்ற அபூர்வப் பாடல்கள் இருந்தால்...மறக்காமல் மயிலனுப்பவும்.

அன்புடன்,
கோ.இராகவன்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP