Tuesday, January 09, 2007

021: யாரே கதி? குமரன் தாள் பணிந்தே துதி!!!



யாரே கதி? குமரன் தாள் பணிந்தே துதி!

அதிகோர சம்சாரத்தில் யாரே கதி?
குமரன் தாள் பணிந்தே துதி!

சமரம் தன்னில் சூரனை தாரகனோடு
சம்ஹாரம் செய்த சிங்கார சங்கர
குமரன் தாள் பணிந்தே துதி!

ஈசன்! வள்ளி தெய்வானை நேசன்! பக்தர் ஹ்ருதய
வாசன்! சண்முக ராமதாசன் குலதெய்வ
குமரன் தாள் பணிந்தே துதி!

இயற்றியவர்: பாபநாசம் சிவன்
பாடியவர்: D.K. பட்டம்மாள்
இராகம்: யதுகுல காம்போதி
தாளம்: ஆதி


***

அருஞ்சொற்பொருள்:

அதிகோர சம்சாரம் - மிகக் கடுமையான உலக வாழ்க்கை
சமரம் - போர்
சூரன், தாரகன் - சூரபத்மனும் அவன் தம்பியும்

7 comments:

Anonymous January 10, 2007 7:27 AM  

மிக நல்ல பாட்டு. இரண்டு முறை கேட்டேன்.

குமரன் (Kumaran) January 10, 2007 10:57 AM  

நன்றி சாயி பக்தரே.

சாத்வீகன் January 10, 2007 4:18 PM  

கேட்டறியாத பாடல். பகிர்ந்தமைக்கு நன்றி.

Anonymous January 11, 2007 12:29 AM  

அறிதான பாடல்....நன்றி குமரன்

குமரன் (Kumaran) January 30, 2007 6:18 PM  

நன்றி சாத்வீகன் & மதுரையம்பதி மௌலி ஐயா.

குமரன் (Kumaran) February 15, 2007 8:27 PM  

மின்னஞ்சலில் யோகன் ஐயா அனுப்பியது:

அன்புக் குமரன்!
குமரன் தாள் பணி ; பட்டம்மாள் குரலில் நான் முதல் தடவை கேட்கிறேன்.
தமிழ் சாகித்தியத்துக்கும் குறைவில்லை.நன்று
யோகன் பாரிஸ்

குமரன் (Kumaran) February 15, 2007 8:28 PM  

நன்றி யோகன் ஐயா.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP