Sunday, October 29, 2006

012: நீயே சரண் ஷண்முகா


நீயே சரண் ஷண்முகா - கருணை நிதி
நீயே சரண் ஷண்முகா - கருணை நிதி
நீ அருள்வாய் என நான்
நின் அடிமைக்கு (நீயே சரண்)

சேய் யாரிடமும் செல்லுமோ - ஈன்ற
தாய் அல்லால்
திருமால் மருகனே
வடிவேல் முருகனே (நீயே சரண்)

சுவாமிநாத மாமயூர வாஹ
சங்கர கௌரி குமார விசாக
ராமதாசன் பணியும் குஹா
சுரராச பூஜித வர முருகா (நீயே சரண்)

பாடியவர்: உன்னிகிருஷ்ணன்
இராகம்: காம்போஜி
தாளம்: ஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

Wednesday, October 25, 2006

011 : மண்ணுக்கும் விண்ணுக்கும்....!

Photobucket - Video and Image Hosting

மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து
மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து
கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்
கந்தனே நீ ஒரு கற்கண்டு! (2)

குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ
குளிர்வீசி வரும்தென்றல் இசைநீயன்றோ
மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ (2)
என் மனக்கோயில் ஒளியேற்றும் ஒளி நீயன்றோ
-மண்ணுக்கும் விண்ணுக்கும்

பாலுக்குள் நெய்யாகும் பொருள் நீயன்றோ
பழத்துக்குள் தேனாகும் சுவை நீயன்றோ
பக்திக்குள் கனிகின்ற கனி நீயன்றோ (2)
தமிழ்ப் பாட்டுக்குப் பொருளாகும் பொருள் நீயன்றோ
-மண்ணுக்கும் விண்ணுக்கும்

பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்

Thursday, October 12, 2006

010. பழநி மலை மீதிலே

முருகன் பாடல் என்றால் கே.பி.சுந்தராம்பாள் பாட்டு இல்லாமலா! இதோ இன்றைய முருகனருளில்!



பழநி மலை மீதிலே
குழந்தை வடிவாகவே
படை வீடு கொண்ட முருகா

பழநி மலை மீதிலே
குழந்தை வடிவாகவே
படை வீடு கொண்ட முருகா

பால்
பழம்
தேனோடு
பஞ்சாமிர்தம் தந்து
பக்தரைக் காக்கும் முருகா
பக்தரைக் காக்கும் முருகா

ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்
சக்தி வடிவுண்டு
மயிலுண்டு
கொடியுண்டு வேல் வேல்

வடமிட்டப் பசுந் தங்கத் தேரு
வடமிட்டப் பசுந் தங்கத் தேரு
எங்கும் ஒளி சிந்த இழுக்கின்ற கரம் பல நூறு
இடை தொட்ட கை கொண்ட பிள்ளை
இடை தொட்ட கை கொண்ட பிள்ளை
எங்கள் இயலிசை நாடகத் தமிழுக்கு எல்லை முருகா
இயலிசை நாடகத் தமிழுக்கு எல்லை முருகா
வேல் வேல் சக்தி வேல் வே
வெற்றி வேல் வேல்
ஞான வேல் வேல்
வடி வேல் வேல்

பாடியவர் : கேபி.சுந்தராம்பாள்
இயற்றியவர் : கவியரசர் கண்ணதாசன்
இசை : திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன்
திரைப்படன் : துணைவன்
படம் நன்றி : http://en.wikipedia.org/wiki/K._B._Sundarambal

இந்தப் பாடலைக் கேட்க



அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, October 10, 2006

008 : முருகன்மேற் காதல்

"முருகன்மேற் காதல்" என்ற தலைப்பில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்கள் இயற்றிய பாடல். ஒலி வடிவம் எனக்கு கிடைக்கவில்லை.

முருக னென்றபெயர் சொன்னால்--தோழி!
உருகு தென்றனுளம் என்னே!
பெருகி நீர்விழிகள் சோர--மனம்
பித்துக் கொள்ளுதுள் ளூர! (முரு)


கந்த னென்றுசொல்லும் முன்னே--என்
சிந்தை துள்ளுவதும் என்னே!
உந்தும் பேச்சுரைகள் உளறி--வாய்
ஊமை யாகுதுளம் குளிர! (முரு)

வேல னென்றபெயர் கேட்டே--ஏனோ
வேர்வை கொட்டுதுதன் பாட்டில்!
கால னென்றபயம் ஓடிப்--புதுக்
களிசி றக்குதடி சேடி. (முரு)


குமர னென்றஒரு சத்தம்--கேட்டுக்
குளிர வந்ததடி சித்தம்!
அமர வாழ்வுபெறல் ஆனேன்--இனி
அடிமை யார்க்குமிலை நானே! (முரு)


குகனெனச் சொல்வதற் குள்ளெ--நான்
அகம்ம றந்தேன்அது கள்ளோ!
தகதக வென்றொரு காட்சி--உடனே
தண்ணென முன்வரல் ஆச்சு! (முரு)


ஆடும் மயிலில்வரக் கண்டேன்--சொல்ல
அழகும் அதைவிடஒன் றுண்டோ?
வீடு வாசல்பொருள் எல்லாம்--துச்சம்
விட்டு மறந்தனடி நல்லாள்! (முரு)


பச்சைக் குழந்தையவன் மேலே--என்றன்
பற்று மிகுந்ததெத னாலே?
இச்சை யாரமிகத் தழுவி--நானும்
இணங்கி யிருந்தனின்பம் முழுகி! (முரு)


கள்ளங் கபடமற்ற பாலன்--மேலே
காதல் கொண்டஎன்னை ஞாலம்
எள்ளி ஏளனம்செய் தாலும்--நான்
எதற்கும் அஞ்சிலன்எக் காலும்! (முரு)


முருகன் கந்தன்வடி வேலன்--ஞானத்
திருக்கு கன்குமரன் சீலன்
சிறுகு ழந்தையா னாலும்--அவனைத்
திரும ணம்புரிவன் மேலும்! (முரு)


வேறு பெயரைச்சொன் னாலும்--சற்றும்
விரும்ப மாட்டெனெந்த நாளும்!
தூறு பேசுவதை விட்டே--எனக்குத்
துணைபுரி முருகனைக் கட்ட. (முரு)


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மிந்தொகுப்புத் திட்டம்

Thursday, October 05, 2006

007 : மருதமலை மாமணியே முருகய்யா...!



கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை ?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை ?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை ?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை!!!

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா!

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உனது மங்கல மந்திரமே!
(மருதமலை)

தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா!
(மருதமலை)

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழு பிறப்பிலும் உன்னை எட்டு வேன்..ஆ..
(மருதமலை)

சக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன் - நான் மறவேன்
பக்திக் கடலென பற்றிப் பெருகிட வருவேன் - நான் வருவேன்

பரமனின் திருமகனே... அழகிய தமிழ்மகனே...
காண்பதெல்லாம் - உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் - எனதுமனம் உறு முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா....

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம்காக்கும் வேலய்யா அய்யா



திரைப்படம்: தெய்வம்
பாடியவர் : மதுரை சோமு
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசையமைத்தவர்: குன்னக்குடி வைத்தியநாதன்

"துள்ளி விளையாடும்"

"துள்ளி விளையாடும்"

சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த ஆதிரை என்ற சிறுமி இந்தப் பாடலை எங்கள் வீட்டிற்கு வந்த போது பாடினார்.
கேட்டதுமே மனம் பறி கொடுத்தேன்.
செட்டிநாட்டு மக்கள் அந்தக் காலத்தில் மலேயாவுக்கு பிழைக்கப் போனபோது கூடவே செந்திலாண்டவனையும் கூட்டிச் சென்று கோயில் கட்டி, 'தண்ணீர்மலையான்' எனப் பெயரிட்டு வழிபட்டனர்.
இப்போதும் பல செட்டி நாட்டுப் பெயர்கள் தண்ணீர்மலையான் என்று இருக்கும்.
அந்த நிலையைக் காட்டும் இப்பாடல் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.[குறிப்பாக ஆசிரியர் ஐயா அவர்களுக்கு!!]

பாடல்

துள்ளி விளையாடும் - சின்னப்
பிள்ளை முகம் மறந்து

வெள்ளி விளையாடும் -- மலேயா
சீமைநகர் அடைய

நாகப்பட்டினத்து - கடலில்
நங்கூரம் பாய்ச்சி நிற்கும்

செட்டிக்கப்பலுக்கு - துணையாம்
செந்தில் ஆண்டவனே


செந்தில் ஆண்டவனே -- ஐயா
செந்தில் ஆண்டவனே
வந்த வினை தீர்க்கும் -- எங்கள்
செந்தில் ஆண்டவனே

கப்பல் ஏறுகையில் - முதலில்
கடல் முகம் தெரியும்

கண்களில் நீரோடு -- நிற்கும்
மனைவி முகம் தெரியும்

அன்னை முகம் தெரியும் -- அன்பு
பிள்ளை முகம் தெரியும் [2]

அந்த முகங்களிலே -- செந்தில்
கந்தன் முகம் தெரியும்


செந்தில் ஆண்டவனே -- ஐயா
செந்தில் ஆண்டவனே
வந்த வினை தீர்க்கும் -- எங்கள்
செந்தில் ஆண்டவனே

பினாங்க் துறைமுகத்தை -- கப்பலும்
நெருங்கி விட்டதையா

கப்பல் அடியினிலே -- கூட்டம்
கண்டிட வந்திருக்கு

தண்ணீர் பூ மலையில் -- நிற்கும்
தண்ணிமலையானே[எங்கள்]

பெண்டுபிள்ளைகளைக் -- காக்கும்
புனித மலையானே


தண்ணி மலையானே -- எங்கள்
தண்ணிமலையானே
கண்களில் நீர் வழிய -- நாங்கள்
கைகள் கூப்புவோமே

செந்தில் ஆண்டவனே -- ஐயா
செந்தில் ஆண்டவனே
வந்த வினை தீர்க்கும் -- எங்கள்
செந்தில் ஆண்டவனே

தைப்பூச நாளினிலே -அவனும்
நகரத்தைக் கண்டிட

தங்க ரதமேறி - தேரில்
நகர்ந்து வருவானாம்

பார்க்குமிடமெங்கும் -- மக்கள்
பக்தி முகம் தெரியும்

காவடி ஆடிவரும் -- சீனர்
காலடியும் தெரியும்


தண்ணிமலையானே -- எங்கள்
தாகம் தீர்ப்போனே
வந்தவரைக் காக்கும் -- எங்கள்
தண்ணிமலையானே

செந்தில் ஆண்டவனே -- ஐயா
செந்தில் ஆண்டவனே
வந்த வினை தீர்க்கும் -- எங்கள்
செந்தில் ஆண்டவனே

[விரைவு கதியில்][fast speed]
செந்தில் ஆண்டவனே -- ஐயா

செந்தில் ஆண்டவனே
வந்த வினை தீர்க்கும் -- எங்கள்
செந்தில் ஆண்டவனே x3

கந்தனுக்கு வேல் வேல் - அந்தக்
காவடிக்கும் வேல் வேல்
கந்தனுக்கும் வேல் வேல்- எங்கள்
கடம்பனுக்கும் வேல் வேல் x 3
****************************************************

முருகனருள் முன்னிற்கும்!
வேலும் மயிலும் துணை!

005. கந்தனைக் கண்டீர்களா

இது ஒரு மீள்பதிவு. ஏன்? இதோ இந்தப் பாடல் ஒலி வடிவில் நீங்கள் கேட்க. கேட்ட பிறகு இந்தப் பாடல் பற்றிய விவரம் தெரிந்தால் கண்டிப்பாகச் சொல்லுங்கள்.

Photobucket - Video and Image Hosting

கந்தனைக் கண்டீர்களா
கன்னித் தமிழ்ப் பெண்டீர்களா (கந்தனைக் கண்டீர்களா

அங்கமெலாம் தங்க நிறம்
அவன் பேரு ஆறுமுகம்
எந்தன்.................... (கந்தனைக் கண்டீர்களா

கையிலே வேலிருக்கும்
கண்ணிலே ஒளியிருக்கும்
நெற்றியிலே நீறிருக்கும்
மத்தியிலே பொட்டிருக்கும்
செம்பவழ இதழ் இருக்கும்
திங்களைப் போல் முகம் இருக்கும்
எந்தன்.................... (கந்தனைக் கண்டீர்களா

தோளிலே அழகிருக்கும்
வேதத்தில் கொலுவிருக்கும்
காலிலே கொலுசிருக்கும்
தாளமாய் அது ஒலிக்கும்
மழலை மொழி இருக்கும்
தமிழே கலந்திருக்கும்
எந்தன்.................... (கந்தனைக் கண்டீர்களா

கால் கோடு பட்ட இடம்
கமகமன்னு மணக்கும்
மயிலேறிப் போகையிலே
மங்கல மணி ஒலிக்கும்
அவன் பெயர் சொன்னதுமே
அமுதமாய் இதழ் இனிக்கும்

எந்தன்.................... (கந்தனைக் கண்டீர்களா
அங்கமெலாம் தங்க நிறம்
அவன் பேரு ஆறுமுகம்
எந்தன்.................... (கந்தனைக் கண்டீர்களா

பாடியவர் : தெரியவில்லை
பாடல் : தெரியவில்லை
இசை தெரியவில்லை

கேட்பதற்கு மிகவும் இனிமையான இந்தப் பாடல் பற்றித் தகவல் கொடுத்தால் மிக்க நன்றி. அப்படிக் கொடுப்பவருக்கு இன்னொரு இனிய பாடல் அனுப்பப்படும்.

படம் நன்றி : http://www.holytreebalasubramaniar.com/Arupadai%20Veedu.htm

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, October 01, 2006

006: ஆடி வருவாய் குகனே



ஆடி வருவாய் குகனே ஷண்முகனே
ஓடி வருவாய் மயில் ஏறிவருவாய் (ஆடி)

பாடி வரும் பக்தர் துன்பங்கள் தீர்த்திடு
நாடி வந்து அன்பர்களை அணைத்து மகிழ்வாய் (ஆடி)

பாடிப்பாடி அகமகிழ்ந்தேன் ஆறுமுகனே
தேடித்தேடிக் காத்திருந்தேன் கார்த்திகேயனே
கோடிக்கோடி இன்பம் தரும் கதிர்காம வேலனே
கூடிக்கூடிப் பக்தர் போற்றும் சுப்ரமண்யனே (ஆடி)

மிகச் சிறிய பாடல் தான். ஆனால் கர்நாடக இசையில் கேட்பதற்கு மிக அருமையாக இருக்கிறது.

பாடியவர்: கே.ஜே. ஏசுதாஸ்
இராகம்: அம்ருத வர்ஷிணி
தாளம்: ஆதி
இயற்றியவர்: புனிதாஸ்ரீ

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP