Monday, September 18, 2006

004. வருவான் வடிவேலன்

Photobucket - Video and Image Hosting

வருவான் வடிவேலன்
தணிகை வள்ளலவன் அழகு மன்னனவன்
நினைத்தால் வருவான் வடிவேலன் (வருவான்......

சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன்
அவள் செங்கனி வாயிதழை நனைக்கின்றவன் (சிரித்துக்.....
இடையினில் கை கொடுத்து வளைக்கின்றவன்
அள்ளி இடுகின்றவன் சொர்க்கம் தருகின்றவன் (ஆஆஆஆஆஆ...இடையினில்...

வருவான் வடிவேலன்
தணிகை வள்ளலவன் அழகு மன்னனவன்
நினைத்தால் வருவான் வடிவேலன்
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா

அடியவர் கேட்ட வரம் அருள்கின்றவன்
என்றும் அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன்
கொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன்
சேவல் கொடியனவன் நமக்கு இனியனவன் (கொடியவர்.....

வருவான் வடிவேலன்
தணிகை வள்ளலவன் அழகு மன்னனவன்
நினைத்தால் வருவான் வடிவேலன்

திருமுருகாற்றுப்படை நான் பாடவா
இல்லை திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா
திருமுருகாற்றுப்படை நான் பாடவா
இல்லை திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா
கந்தர் சஷ்டிக் கவசக் கதை பாடவா
அவன் முன் கையேந்தவா வெற்றிக் கடல் நீந்தவா (வருவான்.....


பாடியவர் : வாணி ஜெயராம்
இயற்றியவர் : கவியரசர் கண்ணதாசன்
இசையமைத்தவர் : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
திரைப்படம் : வருவான் வடிவேலன்
முருகன் படம் நன்றி
www.murugan.org

Tuesday, September 12, 2006

003 : தவமிருந்தாலும் கிடைக்காதது



தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி
தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி
அதைத் தருவதுதான் முருகா உன் சந்நிதி
சுகம் தரும் உன் சந்நிதி
சுகம் தரும் உன் சந்நிதி

ஆடிடும் மயிலும் சேவலின் கொடியும்
தேடிடும் விழியில் தேன்மழை பொழியும்
ஆடிடும் மயிலும் சேவலின் கொடியும்
தேடிடும் விழியில் தேன்மழை பொழியும்
அருள் வடிவாகி ஆறுதல் தருமே
ஓமெனும் மந்திரம் ஒலித்திடும் சந்நிதி
சுகம் தரும் உன் சந்நிதி

கார்த்திகை ஒளியும் காவடி அழகும்
பார்த்திடும் வேளையில் பலன் வந்து சேரும்
கருணையின் வடிவே நான் காணும் துணையே
அடியவர் தினம் தினம் வணங்கிடும் சந்நிதி
சுகம் தரும் உன் சந்நிதி

பாடியவர் : பி.சுசீலா
இசை : சோமு - காஜா

002 : சொல்லாத நாளில்லை..சுடர்மிகு வடிவேலா..!

Photobucket - Video and Image Hosting


பாடல்: சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன்




சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே

உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இணையிலே நின்திருப் புகழினை நான் பாட
இணையிலே நின்திருப் புகழினை நான் பாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அரகர சிவசுத மால்மருகா என
அனுதினம் ஒருதரமாகிலும் - உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

சுடர்மிகு வடிவேலா !

நன்றி : கோ.கணேஷ், கோவில்பட்டி

001 : விநாயகனே வினை தீர்ப்பவனே!

Photobucket - Video and Image Hosting


ஆற்றங்கரை அமர்ந்த ஆனை முகத்தோனே!
ஐயமேதுமின்றி அருள்வழங்கும் ஐங்கரனே!
வினைகள் தீர்க்கவல்ல வேழமுகத்தோனே - விநாயகனே!
எந்தமிழால் வணங்குகிறேன்! ஆசிதந்து அருளுமைய்யா!
***************************************************************************
பாடல்: விநாயகனே வினை தீர்ப்பவனே
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே


அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP